15 June 2025


இந்தியாவில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு



இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி, ஒரு வாரகாலம்  தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (26) காலமானார்.

முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(colombotimes.lk)