காங்கோ குடியரசில் செப்பு சுரங்கம் ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 32 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுரங்கத்தில் உள்ள ஒரு பாலம் எடை காரணமாக இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சுரங்கத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒரு சிப்பாய் தனது துப்பாக்கியால் சுட்டபோது தொழிலாளர்கள் பீதியடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பாலம் இடிந்து விழுந்தது.
காங்கோ குடியரசில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற சுரங்கங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)
