அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தப் பேருந்தில் இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தின் போது பேருந்தில் 52 பேர் பயணித்த நிலையில் அவர்களில் பலர் சீட் பெல்ட் அணியவில்லை என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தின் போது பல குழந்தைகளும் பேருந்தில் பயணம் செய்ததுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
(colombotimes.lk)