17 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


ஹரின் பெர்னாண்டோ இன்று சி.ஐ.டிக்கு



முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை ஆகியுள்ளார்

கெஹலிய ரம்புக்கெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தரமற்ற மருந்துகள்
அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  அழைக்கப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரனதுங்க டொக்டர் ரமேஷ் பத்திரன, மற்றும் ரொஹான் ரணசிங்க ஆசியோரும்  நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

(colombotimes.lk)