22 February 2025

INTERNATIONAL
POLITICAL


இந்திய உயர் ஸ்தானிகர் மஹிந்தவை சந்தித்தார்



இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் அங்கு கலந்துரையாடப்படுள்ளது

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவுகளை இந்திய உயர் ஸ்தானிகர் நினைவு கூர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(colomborimes.lk)