17 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டம்



2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

2 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன்படி எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி புதிய வேட்புமனுக்களை அழைப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதாகவும் தேர்தல் திகதி தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
(colombotimes.lk)