29 January 2026

logo

பாகிஸ்தானில் 200 பேர் பலி



வடமேற்கு மற்றும் வடக்கு பாகிஸ்தானை பாதித்த அடைமழை காரணமாக நேற்று (15) மட்டும் கிட்டத்தட்ட 200 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலையால் கைபர் பக்துன்க்வா மலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலைகளில் பெய்த கனமழை, திடீர் வெள்ளம், மின்னல் தாக்குதல்கள் மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

(colombotimes.lk)