02 April 2025

INTERNATIONAL
POLITICAL


கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது



கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று (21) மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை சுட்டிக்காட்டி கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(colombotimes.lk)