12 March 2025

INTERNATIONAL
POLITICAL


நுவரெலியாவில் கார் விபத்து



நுவரெலியா, கந்தபொலவிலிருந்து நுவரெலியா நகருக்குச் சென்ற கார் ஒன்று, பாதையை விட்டு விலகி, பாறைக்குக் கீழே சுமார் 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் காரில் பயணித்த பாலர் பள்ளி மாணவி, அவரது தாயார் மற்றும் சாரதி காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தபொல மற்றும் பொரலந்த பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஓட்டிச் சென்ற கார் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)