24 May 2026

logo

பண்டாரவளையில் சூதாட்ட விடுதி முற்றுகை- 10 பேர் கைது



பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை, பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (23) அதிகாலை முற்றுகையிட்டுள்ளனர். 

பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


(colombotimes.lk)