18 November 2025

logo

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு



லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்போலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)