இன்று (06) நள்ளிரவு முதல் ஃபிரைடு ரைஸ், கொத்து மற்றும் சோறு , கறி ஆகியவற்றின் விலைகள் ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக, சிற்றுண்டிகளின் விலையை ரூ. 10 குறைக்க முடிவு செய்யப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் கூறினார்.
நேற்று (05) நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் ஏற்பட்ட கணிசமான உயர்வின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
(colombotimes.lk)
