21 January 2026

logo

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்



வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும்  தெரிவித்துள்ளது.

இதேபோல், தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் சுமார் 75 மி.மீட்டர் அளவுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் ளிமண்டலவியல் திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)