19 April 2025

INTERNATIONAL
POLITICAL


இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை



இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

காஸா பகுதியில் பலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் அடிப்படையில் அவருக்கு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலனுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)