உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டை வெற்றிகரமாக ஏறிய முதல் பயணக் குழுவின் கடைசி உறுப்பினரான நேபாளத்தைச் சேர்ந்த காஞ்சா ஷெர்பா நேற்று (16) காலமானார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இறக்கும் போது அவருக்கு வயது.92
எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர் தலைமையிலான 35 பேர் கொண்ட குழு 1953 ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறியமை குறிப்பிடத்தக்கது.
(colombotimes.lk)