03 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


சூடான் நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு



மேற்கு சூடானின் மாரா மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு ஆகஸ்ட் 31 ஆம்  திகதி நிலச்சரிவு ஏற்பட்டது.

இறந்தவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிவாரண நிறுவனங்கள் உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)