ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிக்கின்றனர்.
இலங்கைக்கான தூதரகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(colombotimes.lk)
