மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.
இதன்படி திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் பிரிவுகளின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அமைச்சர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2489/48) வெளியிடப்பட்டுள்ளது.
(colobotimes.lk)
