23 July 2025

logo

கொரியாவுடன் பருவகால வேலைக்கு ஒப்பந்தம் – அமைச்சரவை ஒப்புதல்



கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை பருவகால தொழிலாளர்களை விவசாயத் துறைக்காக அனுப்புவதற்கான உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2025 பெப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில், இந்த முன்னோடிக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும், கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், அதிகபட்சம் 8 மாதங்கள் வரை இலங்கை தொழிலாளர்கள் போசோங்க் பிராந்திய விவசாயக் கிராமங்களில் பணியாற்றி, வெளிநாட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கை பருவகால தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(colombotimes.lk)