மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 18.7 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்தப் பணிகள் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(colombotimes.lk)
