நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகள் என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை மற்றும் அக்கரப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் தலைவர் சாலிய பண்டார நவரத்ன, வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் சப்ரகமுவ மாகாண பணிப்பாளர் தாரக விதானகமராச்சி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ளனர்.