11 August 2025

logo

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணி நேரம் நீர் தடை



கம்பாஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (11) காலை 10 மணி முதல் 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்ட்டுள்ளதாக  என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை ம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொட வரையிலான குழாய் சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது 

அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ரன்பொகுணகம, பட்டாலியா, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ மண்டலங்களுக்கு 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கோரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, மாபகலந்த, மாபகொல்ல, ஊராபொல, ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)