16 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்கள் பாதிப்பு



நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது 80,642 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)