பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்த்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்றும், 2026 பட்ஜெட்டில் தொடர்புடைய திட்டங்கள் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான பயிற்சித் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்த்துள்ளார்.
(colombotimes.lk)