18 November 2025

logo

வேன் ஒன்று மரத்தில் மோதிய விபத்து



மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்து மஹியங்கனை மருத்துவமனை மற்றும் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

(colombotimes.lk)