18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


ஈரான் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி பலி



இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

இன்று (13) காலை, இஸ்ரேல் தனது 'எதிரியை முடக்கும் தாக்குதல்கள்' என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானின் பல்வேறு இராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 

இதில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. 

பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 

இந்த தாக்குதலின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

(colombotimes.lk)