கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 89,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 45 வயதுக்குட்பட்ட சீன தொழிலதிபர்கள் என கூறப்படுகின்றது.
(colombotimes.lk)
