துறைமுக அதிகாரசபையால் நிறுவப்பட்ட ப்ளூமெண்டல் கொள்கலன் நிலையம் , கொள்கலன் வாகனங்களை நிறுத்துவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் சேவைகள் மற்றும் சுங்க அனுமதி நடவடிக்கைகளில் நெரிசலைக் குறைப்பதற்கான குறுகிய கால தீர்வாக இது உள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
(colombotimes.lk)
