02 April 2025

INTERNATIONAL
POLITICAL


FACEBOOK ஐ தடை செய்தது பப்புவா நியூ கினியா



தவறான தகவல்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் பரவி வருவதால், பப்புவா நியூ கினியா FACEBOOK ஐ தடை செய்துள்ளது

இந்தத் தடை நேற்று முன்தினம் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்த அவசரகால தடையை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

இது மனித உரிமை மீறல் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஜியாம்மாலி, தனது அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை அடக்க முயற்சிக்கவில்லை என்று தெரிவித்த்துள்ளார்

(colombotimes.lk)