01 November 2025

logo
INTERNATIONAL
POLITICAL


ஜான்ஸ்டன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு



முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சியத்தின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வணிகத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​எஸ்.டி.ஏ., ஊழியர்களை, அரசுப் பணிகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவைத்து , அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

(colombotimes.lk)