06 June 2025


நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கெஹெலிய மற்றும் ரமித்



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றியபோது, பதினைந்து பேரை பெயரளவில் தனது ஊழியர்களாக சேர்த்து, அவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேர ஊதியத்தை வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக அவர்கள் இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

(colombotimes.lk)