18 November 2025

logo

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவலை



சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். 

இன்று (23) காலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்குச் சென்றபோது ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தவேளை  அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல் செய்தால் அது அவரது சொத்து என்றும், ரணில் விக்ரமசிங்க அதை எதிர்கொள்வார் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுபோன்ற செயல்கள் பழிவாங்கல் மட்டுமே என்றும், மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்றும் ,நாங்கள் மக்களை நேசிக்கிறோம், எனவே மக்கள் எங்களை நேசிக்கிறார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்த்துள்ளார்.


(colombotimes.lk)