22 July 2025

logo

இத்தாலியில் வெடித்து சிதறிய எட்னா எரிமலை



இத்தாலி – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து பெருந்திரளான சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பாவின் மிக உயரமான செயலில் உள்ள எரிமலை எட்னா ஆகும், இன்று அதிகாலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியது.

இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம், இந்த வெடிப்பு “வளர்ந்து வரும் தீவிரத்தின் ஸ்ட்ரோம்போலிக் வெடிப்புகளின்” தொடர் என்று கூறியது.

குறித்த எரிமலை வெடிப்பதற்கு முன்பு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 2.8 கி.மீ உயரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)