23 February 2025

INTERNATIONAL
POLITICAL


பல மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம்



சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)