17 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம்



இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோரை அந்த போட்டியில் இருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு கால அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இவர்களுக்குப் பதிலாக நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு உதார, மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு  இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி அந்த போட்டியை கைப்பற்றியுள்ளது

 
(colombotimes.lk)