ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று இரவு (22) அமெரிக்கா புறப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி 24 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்த உள்ளார்.
ஜனாதிபதி அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)
