18 January 2026

logo

குளியாப்பிட்டி விபத்தில் சாரதிக்கு விளக்கமறியல்



குளியாப்பிட்டியில் இரண்டு பாடசாலை  மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் லாரியின் ஓட்டுநர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 8 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் 

குறித்த நபர் இன்று (28) குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜெயலத் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஓட்டுநர் 24 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் ஓட்டியதாக தெரியவந்துள்ளதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி,  லொறியின் உரிமையாளருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)