வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் படகோட்டும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.