கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (23) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)