18 January 2026

logo

படகு கவிழ்ந்து இளைஞர் மரணம்



பாலகுடாவ குளத்தில் படகு கவிழ்ந்ததில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலகுடாவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட படகு இயந்திரத்தை பழுதுபார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கலப்பில் மூழ்கிய இளைஞர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கல்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

(colombotimes.lk)