09 July 2025

logo

04 மாவட்டங்களில் 16 நிவாரணக் குழுக்கள்



நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 மாவட்டங்களுக்கு 16 அனர்த்த நிவாரணக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அம்பாறை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வட பிராந்தியத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட G.E.C உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை மீளக் கொண்டுவருவதற்கு பெல் 212 உலங்குவானூர்தி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)