05 June 2026

logo

மிஹிந்தலை பொலிஸ் விளக்கமறியலிலிருந்து இருவர் தப்பியோட்டம்



மிஹிந்தலை பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

29 மற்றும் 30 வயதுடைய மிஹிந்தலை அம்பத்தலகம பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.