CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று (11) முதல் கொழும்பு மாவட்டத்தில் வாகன புகை சோதனை தொடர்பான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மாத காலத்துக்குள் 1000 வாகனங்களில் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் புகை பரிசோதனையில் தோல்வி அடையும் வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும் எனவும்,அதன்படி, 14 நாட்களுக்குள் பராமரிப்பு ஆணையின்படி திருத்தங்கள் செய்து வாகனத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, வாகன புகைப்பரிசோதனை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(colombotimes.lk)