அனுராதபுரம் பொலீஸ் பிரிவின் சாலியபுர பகுதியில் நேற்று (20) 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அனுராதபுரம் காவல் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹிடோகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
(colombotimes.lk)